இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா நிறுவனங்களில் மிகவும் முதன்மையானதாக கருதப்படும் மற்றும் இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பப்ஜி செயலிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்திருக்கிறது.
இதன் காரணமாகவே மத்திய அரசு தடை விதித்த காரணத்தை கூறியிருக்கிறது அதில் கூறப்படுவதாவது நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு ஒருமைப்பாட்டு ஆகியவற்றின் காரணமாகத்தான் செயலியை நாங்கள் தடைசெய்து இருக்கிறோம்.
இதற்கு முன்பே சீனாவின் பல ஆப்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு தற்போது கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
தற்போது பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு ஆப்பு வைத்துள்ளது.
சீனாவுக்கு மிகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
பப்ஜி என்ன பயன்?
இந்தியாவில் சுமார் 33 மில்லியன் பயனர்கள் பப்ஜி செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த பப்ஜி செயலினால் இளைஞர்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
ஆகையால் இந்த பப்ஜி செயலிக்கு தடை விதித்திருப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் இது கேம் பயனர்களுக்கு எப்படி அமையுமோ என்று தெரியவில்லை.
ஆனால் இதனால் நல்ல மாற்றம் உண்டாகும் என்பது மறுக்கப்படாத உண்மை.
இவர்கள் தொடர்ந்து பப்ஜி செயலியில் நேரத்தை கழித்து வருவதால் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளையும் மாணவர்கள் சந்திக்கின்றனர்.
இதுபற்றி பயனர்களுக்கு மிகுதியை தரும் வகையில் நிச்சயம் அமையும் ஆனால் நமது நாட்டிற்கு நாம் நம்மாலான இந்த ஒரு சகிப்புத்தன்மை யாவது அர்ப்பணிப்போம்.
கடந்த சில நாட்களாக பாங்காங் ஏரியில் சீன ராணுவத்தினர் எல்லையில் ஊடுருவ முயன்றனர் அப்பொழுது நமது ராணுவ வீரர்கள் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மற்றும் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவருகிறது.
இதைக் கூறியவர் நாடுகடந்த ஒரு லடாக் அலுவலர்.
இது பற்றி உங்களின் கருத்தை பதிவிடுங்கள்.
For more information




0 Comments